பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை

247 0

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரம் போதுமான அளவு களஞ்சியம் செய்யப்படுத்தப்பட்டிருப்பதாக உரப் பிரிவின் செயலக பணிப்பாளர் ஜி. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இம்முறை 8 இலட்சம் ஹெக்டயார் காணியில் பெரும்போக நெற் செய்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுபோகத்திற்கான உர விநியோகம் தற்பொழுது பூர்த்தியடைந்து இருப்பதாகவும்
நெல்லுக்கான 50 கிலோ உரம் மூட்டை 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அதன் பணிப்பாளர் தெரிவித்தார்.

Leave a comment