புத்தளம், தில்லையடி ரத்மல்யாய பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரை பொலிஸ் நச்சு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இன்று (19) மாலை குறித்த நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் 560 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம் பொலிஸ் நச்சு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம், ரத்மல்யாய பகுதியை சேர்ந்த நாசிக் மற்றும் இம்ரான் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் ஹெரோயினையும் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் நச்சு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.