சோமாவதி தேசிய பூங்காவில் தீப்பரவல்

219 0

பொலன்னறுவை சோமாவதி தேசிய பூங்காவில் இன்று பிற்பகல் பரவிய தீ இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பதுடன் இதனால் சுமார் 2 ஏக்கர் தீக்கிரையாகியுள்ளதாகவும் புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலன்னறுவை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் காற்று பலமாக வீசுவதால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment