தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு தேவையான சகலவிதமான எரிபொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில், இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக, அதிவேக வீதி செயற்பாட்டு முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 24 மணிநேரம் திறந்திருக்கும் எனவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.
வெலிபென்ன பகுதியில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், குறித்த இடத்தில் ஓய்வு எடுக்கும் வசதிகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.