அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை- மேர்வின் சில்வா

208 0

அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு தான் பயம் இல்லை என, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வா போன்று தான் அரசியல் செய்யவில்லை என, ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சரத் பொன்சேகா  நேற்று (18) தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலே​யே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

நான் களணியில் இருந்து சென்றுவிட்டதாக கருத வேண்டாம். களனியில் தான் இருக்கிறேன். முன்னர் களனி விகாரைக்கு வந்தபோது நடந்தவை ஞாபகம் இருக்கிறதா? குதிக்க வேண்டாம் இன்னும் கூறுவதற்கு பல விடயம் இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment