எரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன

198 0

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பேருந்து கட்டணங்களும் அத்தியவசிய பொருட்களுக்கான விலையும் அதிகரிக்கப்பட்டதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நேற்று (17) மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் பதுளை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment