கல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

257 0

கிளிநொச்சி, கல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரம் புலேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (17) கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற போது காணாமல் போயுள்ளதாக தர்மபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த நபருடைய சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment