நாளை முதல் 48 மணி நேர நீர் விநியோக தடை

461 0

மாத்தளை மாவட்டத்தில் பல இடங்களுக்கு நாளை (17) முதல் 48 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தில் தடை ஏற்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை (17) காலை 8 மணி முதல் நாளை மறுநாள் (18) காலை 9 மணி வரை நீர் விநியோகத்தில் தடை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மாத்தளை நகரம், ரத்தோட்டை சந்தியில் இருந்து ஏ 9 நெடுஞ்சாலை வரையான பகுதி, அலுவிஹார விகாரையை சுற்றியுள்ள பிரதேசம் மற்றும் பலாபத்வல நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கே இந்த நீர் விநியோகத்தில் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி வடக்கு பகுதியின் ஊடாக மாத்தளை நகருக்கு நீர் விநியோகத்தை மேற்கொள்ளும் குழாயில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளமையால் இந்த நீர் விநியோக தடை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Leave a comment