வெல்லவாய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

181 0

வெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 36ம் கட்டை பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீண்ட காலமாக இருந்து வந்த மோதல் நிலை காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு தயாரிப்பு துப்பாகியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளநிலையில் குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment