தேசியப் பட்டியலில் வருபவர்களுக்கு தேர்தல் முறைமையின் பிரச்சினை புரியாது- ரவுப்

210 0

தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்துக்கு வந்தவர்களுக்கு தேர்தல் முறைமையினால் கட்சிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விளங்கிக் கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலை புதிய முறையில் நடைமுறைப்படுத்தியதனால் முகம்கொடுத்த பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படாத நிலை உள்ளது. இது போதாமைக்கு மாகாண சபைத் தேர்தலையும் புதிய முறைமையில் நடாத்த சம்பந்தப்பட்ட அமைச்சர் விடாப் பிடியாக நிற்கின்றார்.

தற்பொழுது மாகாண சபைத் தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லை நிர்ணயத்தில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலை இழுத்தடிப்பதற்கு காரணமாக புதிய தேர்தல் முறைமையைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் நாம் அரசாங்கத்துக்கு கூறிக் கொள்கின்றோம் எனவும் அமைச்சர் கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

Leave a comment