பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது-விக்னேஸ்வரன்(காணொளி)

257 0

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தல்இ பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைத்தார்.

பொலிஸாருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது என தன்னால் தெரிவிக்கப்பட்டதாகவும்இ அதனை பொலிஸ் மா அதிபர் ஏற்றுக்கொண்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்

வடக்கு மாகாண முதலமைச்சருக்கும்இ சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரஇ பிரதி அமைச்சர் நளின் பண்டாரஇ பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரஇ பிரதி அமைச்சர் நளின் பண்டாரஇ பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் வடக்கில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினரையம் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சந்திப்பின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்………

Leave a comment