கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம்

217 0

யாழ். கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் யாழ் மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து நேற்று ஆராய்ந்தனர்.

அவர்கள் இன்றும் யாழ். மாவட்டத்திலேயே தங்கியிருக்கும் நிலையில் யாழ். கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொடிகாமம் – கச்சாய் வீதியில் வீ.சி. ஒழுங்கையில் உள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த குழு ஒன்று வீட்டை அடித்து சேதப்படுத்தியதுடன் வீட்டுக்குள் புகுந்து 5 பிள்ளைகளின் தந்தையான சிவராசா சசிக்குமார் என்பவர் மீது சரமாரியாக வாளால் வெட்டி விட்டுத் தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 44 வயதுடைய சசிக்குமார் வைத்தியசாலையி ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு உடனடியாகவே முறைப்பாடு கொடுக்கப்பட்ட போதும் இன்று காலை 9 மணி வரை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கூறி 24 மணி நேரத்திற்குள் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment