ஹெரோயினுடன் ஒருவர் கைது

192 0

ஹட்டன் நகரில் 713 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் இன்று (13) அதிகாலை, ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் வந்த நபர் ஒருவரை சோதனை செய்த போது குறித்த நபரிடமிருந்து ஆறு சிறிய பக்கெட் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹெரோயினை மிகவும் சூட்சமமான முறையில் உடம்பில் மறைத்து வைத்து கொண்டு சென்ற போது, ஹட்டன் மல்லியப்பு சந்தியில் மேற்படி பேருந்தினை சோதனையிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஹெரோயின் பக்கெட்டுக்கள் கொட்டகலை பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் ஹெரோயின் பக்கெட்கள் ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்று (13) ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment