சிறுத்தை குட்டி ஒன்று உயிருடன் மீட்பு

319 0

டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, டயகம இலக்கம் ஒன்று தோட்டத்தில் தேயிலை மலையில் இருந்து இன்று (12) மாலை 4 மணி அளவில் சிறுத்தை குட்டி ஒன்றை பொது மக்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள் உயிருடன் மீட்டு, வன ஜீவராசிகள் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த போது, தேயிலை மலையில் மூன்று சிறுத்தை குட்டிகள் ஓடியதை தோட்டத் தொழிலாளர்கள் கண்டுள்ளனர். அதனை தொடர்ந்து ஒரு குட்டி மாத்திரம் பொது மக்களால் பிடிக்கப்பட்டு தோட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்த பின் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து நுவரெலியா வன ஜீவராசிகள் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் இந்த சிறுத்தை குட்டி ஒப்படைக்கப்பட்டது.

குறித்த தேயிலை மலையை சுற்றி சுமார் 10 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய காடுகள் காணப்படுவதாகவும், அங்கிருந்து உணவு தேடுவதற்காக தனது தாய் சிறுத்தையுடன் வந்திருக்கலாம் எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தை குட்டிகள் பிறந்து மூன்று மாதங்கள் பூரத்தியடைந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

அண்மைக்காலமாக மலையகத்தின் பல பகுதிகளில் பல தோட்டங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment