வவுனியா இரட்டை பெரியகுளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா இரட்டை பெரியகுளம் பகுதியிலுள்ள தனியார் காணியை இன்று காலை துப்பரவு செய்யும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை அவதானித்த காணியின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக தேடுதல் மேற்கொண்டபோது ஒரு வெடிகுண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இதனை அண்டிய பகுதிகளில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை இரட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.