உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் மூன்றுடன் மூன்று பேர் கைது

200 0

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் மூன்றுடன் சந்தேகநபர்கள் மூன்று பேர் மொனராகலை மாவட்டத்தின் சில பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சியம்பலாண்டுவ, புத்தல மற்றும் மெதகம ஆகிய பிரதேசங்களில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சியம்பலாண்டுவ, புத்தல மற்றும் மெதகம ஆகிய பொலிஸ் நிலையங்களால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், உரிய பொலிஸ் நிலையங்களில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a comment