பாடசாலை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியர் மூவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை கலஹா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கலஹா தெல்தோட்டை கிரேட்வெலி தோட்டத்தைச் சேர்ந்த 11,12,13 வயதுகளையுடைய 3 சிறுமிகளையே இவ்வாறு சந்தேகநபர் பாலியல் குற்றத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சிறுமிகள் தெல்தோட்டையில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் நிலையில் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது சந்தேகநபர் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் குற்றத்தை புரிந்துள்ளதாக பெற்றோர் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர்.
இது குறித்து அதிபர் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து பொலிஸார் நேற்றைய தினம் சந்தேகநபரை கைதுசெய்துள்ளதுடன் மூன்று சிறுமிகளையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளனர்.