சிறுமியர் மீது பாலியல் குற்றம் புரிந்­த­தாகக் கூறப்­படும் நபர் கைது

270 0

பாட­சாலை விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த சிறு­மியர் மூவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் குற்றம் புரிந்­த­தாகக் கூறப்­படும் நபர் ஒரு­வரை கலஹா பொலிஸார் நேற்று கைது செய்­துள்­ளனர்.

கலஹா தெல்­தோட்டை கிரேட்­வெலி தோட்­டத்தைச் சேர்ந்த 11,12,13 வய­து­க­ளை­யு­டைய 3 சிறு­மி­க­ளையே இவ்­வாறு சந்­தேகநபர் பாலியல் குற்­றத்­திற்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இச்­சி­று­மிகள் தெல்­தோட்­டையில் அமைந்­துள்ள பிர­பல பாட­சா­லை­யொன்றில் கல்வி கற்­று­வரும் நிலையில் பாட­சாலை முடிந்து வீடு திரும்பும் போது சந்­தேகநபர் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக பெற்றோர் பாட­சாலை அதி­ப­ரிடம் முறை­யிட்­டுள்­ளனர்.

இது குறித்து அதிபர் பொலி­ஸா­ரிடம் முறை­யிட்­ட­தை­ய­டுத்து பொலிஸார் நேற்­றைய தினம் சந்­தேகநபரை கைதுசெய்­துள்­ள­துடன் மூன்று சிறுமிகளையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a comment