எவன்காட் விவகாரம் – ஒக்டோபர் 30 வரை வழக்கு ஒத்திவைப்பு

196 0

எவன்காட் விவகாரத்துடன் தொடர்புடைய வழக்குக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை காரணமாக, வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிவரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பலை பராமரிக்க எவன்காட் மெரிடைம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிமையையிட்டு, 1,140 கோடி ரூபாய் நட்டத்தை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று (9) விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்பட்ட போதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குடன் ​தொடர்புடைய பிரதிவாதிகளாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ​கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment