அடுத்த வருடத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்-கணேசன்

245 0

மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்தவில்லை எனின் அடுத்த வருடத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முற்படுவதனால் மேலும் தேர்தல் பிற்போடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment