வவுனியாவில் புதையல் தோண்ட முயற்சி

13386 0

வவுனியா பட்டக்காடு, மரக்காரம்பளை வீதியில்  நேற்று மாலை புதையல் தோண்டுவதற்கு மேற்கொண்ட முயற்சி பொலிசாரின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று மாலை வவுனியா பட்டக்காடு. மரக்காரம்பளை வீதியிலுள்ள பகுதி ஒன்றில் ஏற்கனவே புதையல் தோண்டப்பட்டுள்ளது எனினும் எவ்விதமான பொருட்களும் கிடைக்கவில்லை.

இதையடுத்து நேற்று மாலை அப்பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் அப்பகுதியில் எவரும் இவ்வாறான முயற்சியில் ஈடுபடவில்லை என்பதைக்கண்டறிந்துள்ளனர். இதையடுத்து சற்று நேரம் பாதுகாப்புக்கடமைகளை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து பொலிசார் விலகிச் சென்றுள்ளனர்.

இப்பகுதியில் புதையல் இருப்பதாகத் தெரிவித்து அண்மையில் ஒரு குழுவினரால் புதையல் தோண்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment