வவுனியா பூந்தோட்டம், பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுகநாவலரின் திருவுருவ சிலையை விசமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இந்தப் பகுதியில் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்கள் மது அருந்துவதாகவும், அவர்களுக்குள் இடம்பெற்ற தகாராறு காரணமாக சிலையை உடைத்திருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.