போர் இரகசியங்களை வெளியிடும் கீழ்த்தரமானவன் நானல்ல!

439 0

major-general-kamal-gunaratneபோர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நானல்ல என அண்மையில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண போர் இரகசியங்களை வெளியிட்டார் என குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பாக ஆங்கில உடகம் ஒன்று மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,அண்மையில் வெளியிடப்பட்ட நூலின் ஊடாக எந்தவொரு போர் இரகசியங்களும் அம்பலப்படுத்தப்படவில்லை.நான் போர் இரகசியங்ளை வெளியிடும் படைவீரனல்ல. போர் இரகசியங்கள் இருந்தால் அது நாம் சாகும் போது எம்முடனேயே புதைந்துவிடுமே தவிர, அவற்றை வெளியிடும் பெறுமதியற்ற மனிதனல்ல நான்.

எனது நூலில் எந்தவொரு போர் இரகசியங்களையும் வெளியிட்டதில்லை.பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய விடயங்களையே நான் நூலில் குறிப்பிட்டுள்ளேன்.எனது பெருமையை பிரச்சாரம் செய்யும் நோக்கில் நூலை எழுதவில்லை.வறிய பெற்றோரே தமது பிள்ளைகளை படையில் இணைத்தனர். அவர்கள் போர் பற்றி அறிந்து கொள்ளவே இந்த நூலை சிங்களத்தில் எழுதினேன். நாம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தும் புலம்பெயர் மக்கள் புரிந்து கொள்ள இந்த நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.நான் எனது உயிர் இருக்கும் வரையில் அரசியலுக்கு வர மாட்டேன் என்பதனையே வலியுறுத்துகின்றேன என அவர் தெரிவித்துள்ளார்.