அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களையும், மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வருமாறு பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று (06) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்து வௌியிடுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நலன் கருதி, தற்போதைய அரசாங்கத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக்கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பணிகளை செய்து, 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

