டைம்ஸ் செய்தி குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடுகிறோம்-நாமல்

199 0

நியுயோர்க் டைம்ஸ் செய்தி சம்பந்தமாக யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சேறு பூச முற்பட்டு இராஜதந்திர பிரச்சினையாக மாறி மீண்டும் சீனாவை பகையாளியாக மாற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் கூறினார்.

Leave a comment