புகையிரத நிலையங்களிலும் மஞ்சள் நிறக் கோடு

4811 0

கடந்த ஐந்து மாதகாலத்தினுள் புகையிரத விபத்துக்கள் காரணமாக 241 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், புகையிரத விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் விரிவான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய மன்றம் தெரிவித்துள்ளது.

பிரதான புகையிரதங்கள் மற்றும் புகையிரத மேடைகளை (Platform) பயன்படுத்தி பொதுமக்களுக்கு வெளிப்பூட்டும் வேலைத்திட்டம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புகையிரத மேடைகளில் (Platform) மஞ்சள் நிற கோடு பதியப்படவுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய மன்றத்தின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment