திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது தாயின் இரண்டாவது கணவரை வெட்டி கொலை செய்த நபர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார்.
திருகோணமலை, ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.எச்.சமீர லக்மால் எனும் 38 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியில் கடந்த 2011 ஆம் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி தனது தாயின் இரண்டாவது கணவரை கொலை செய்த குற்றத்துக்காக குறித்த நபருக்குத் தூக்குத் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நீதிமன்றுக்கு இடமாற்ம் பெற்றுச் சென்ற நீதிபதி, திருகோணமலையில் வழங்கிய முதலாவது தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

