திருடர்களை அரசியலுக்கு கொண்டு வருவதால் மக்கள் தான் இறுதியில் கஷ்டப்படுகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியரத்ன தெரிவித்துள்ளார்.
பதுள்ளையில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் செயற்பாடுகளால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் நன்கு அறிந்திருந்தாலும் அவர்கள் மீண்டும் அதே அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊழல்வாதிகளுக்கும் திருடர்களுக்கும் தண்டனை வழங்குவதாக தெரிவித்து இந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தற்போது ஊழல்வாதிகளும் திருடர்களும் சுதந்திரமாக வெளியில் இருப்பதாகவும் மக்கள் இதனை மாற்றும் வரையில் நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

