சர்வதேச தகவலறியும் மாநாடு ஜனாதிபதி தலைமையில்

309 0

24836646501சர்வதேச தகவலறியும் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வதேச மாநாடொன்று நடைபெறவுள்ளது.

ஊடகத்துறை அமைச்சு மற்றும் அரசாங்கத் தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு தகவல் அறிதல், மற்றும் ஊடக மறுசீரமைப்பு என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

இந்த சர்வதேச மாநாட்டில் பிராந்திய மற்றும் சர்வதேச துறைசார் நிபுணர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

குறிப்பாக தகவல் அறியும் செயற்பாட்டில் பிராந்திய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளுதல், தொழில்நுட்ப பரிமாற்றுதல் ஆகியன இந்த மாநாட்டின் நோக்கமாகும்.