ஆதாம்பாலம், மணல்தீடைகளின் நிலை தொடர்பில் ஆய்வு (காணொளி)

583 0

 

rameswaram-shipping-ministry-inspectionஇந்தியாவின் தனுஷ்கோடி அருகிலுள்ள ஆதாம்பாலம், மற்றும் மணல்தீடைகளின் தற்போதைய நிலை தொடர்பில், இந்திய கப்பல் போக்குவரத்துறை செயலாளர் தலைமையில் உயர் அதிகாரிகள் குழுவினர் இன்று ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்திய கடலோர காவல்படையினருக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் கப்பலின் கப்பல் போக்குவரத்துத்துறை செயலளர் ராஜீவ்குமார் தலைமையில் இந்த ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகக்கழக் தலைவர், சென்னை துறைமுக தலைமை பொறியியலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர், தனுஷ்கோடி அருகே உள்ள ஆதாம்பாலம், மணல்தீடை மற்றும் பாம்பன் வாராவதி நீர்தேக்கம் வழியாக பாம்பன் தூக்குபாலம் உள்ளிட்ட பகுதிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின் மண்டபம் கடலோர காவல்படை முகாமில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடாத்தினர்;.