மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கில் காணப்படும் கூட்டு எதிர்க் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு அபேட்சகரை தீர்மானிக்கும் போது வெடிப்பு ஏற்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வெடுக்கப் போகும் காலம் மிக தொலைவில் இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவில் தான் அக்கூட்டணி தாக்குப் பிடிக்கின்றது என்பது யாரும் அறிந்த உண்மை. மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் நீண்டகாலம் இருக்க முடியாது. அவர் ஓய்வு பெற்றவுடன் அக்கட்சியின் முகவரி இல்லாமல் போகும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.