நான் தெரிவித்த விடயத்தினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க திரிபுபடுத்துகின்றார்!

206 0

நான் தெரிவித்த விடயத்தினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க திரிபுபடுத்துகின்றார் என இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நியுயோர்க் டைம்ஸ் கட்டுரையை எழுதியுள்ள பத்திரிகையாளர் மரியா அபி ஹபீப் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க விடுத்துள்ள அறிக்கையொன்று தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே பத்திரிகையாளர் அபி ஹபீப் இதனை தெரிவித்துள்ளார்.

எங்களது கட்டுரை பல தரப்பினரிடரிமிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டது நான் யாரிடமிருந்து தகவல்களை பெற்றேன் என்பதை அமைச்சரிடம் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் தொலைபேசியில் அவரிற்கு தெரிவித்த விடயங்களை அவர் திரிபுபடுத்துகின்றார் என தெரிவித்துள்ள பத்திரிகையாளர் நான் அவரிற்கு உதவமாட்டேன், சேற்றை வாரியிறைக்கும் நடவடிக்கைகளிற்கு உதவ மாட்டேன் என நான் அவரிடம் குறிப்பிட்டிருந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment