தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவரே வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர்-சிறீதரன்

190 0

வடக்கு மாகாண சபை தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் நிறுத்­தப்­ப­டு­கின்ற முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரா­கத் ­தான் இருப்­பார் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறித­ரன் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது அவர் இத­னைக் கூறி­னார்.

‘வடக்கு மாகாண சபைக்­கான முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் யார் என்று தமிழ் அர­சுக் கட்­சி­யின் மத்திய குழு இன்­னும் முடிவு எடுக்­க­வில்லை. கட்­சி­யி­லுள்ள பெரும்­பா­லா­ன­வர்­கள், கட்­சி­யின் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ரா­சா­வைக் கள­மி­றக்­க­வேண்­டும் என்று விரும்­பு­கின்­ற­னர். கடந்த தேர்­த­லி­லும் அவ­ருக்­குத்­தான் அந்­தச் சந்­தர்ப்­பம் இருந்­தது.மாற்­றத்தை கொண்­டு­ வ­ரு­வ­தற்­காக கடந்த தடவை நீதி­ய­ர­சர் விக்­னேஸ்­வ­ர­னைக் கள­மி­றக்­கி­யி­ருந்­தோம்.

அப்­போ­தைய அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளி­னால் அவ­ரைத் தெரிவு செய்­தி­ருந்­தோம். கடந்த தேர்­த­லில் தன்­னு­டன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­தி­ரா­சா­வும் போட்­டி­யி­டட்­டும். இரண்டு ஆண்­டு­க­ளின் பின்­னர் அவர் ஆட்­சிப் பொறுப்­பேற்­கட்­டும் என்று விக்­னேஸ்­வ­ரன் அப்­போது கூறி­யி­ருந்­தார். ஆனால் மாவை அதனை நிரா­க­ரித்­தி­ருந்­தார்.

மாவை சேனா­தி­ராசா, தமிழ் மக்­க­ளு­டைய விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் 50ஆண்­டு­கள் அர­சி­யல் பணி­யாற்­றி­யி­ருக்­கி­றார். மக்­க­ளோடு இருந்­தி­ருக்­கின்­றார். அவ­ரு­டைய பய­ணத்­துக்கு ஒரு சந்­தர்ப்­பம் வழங்­க­வேண்­டும்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் இரண்டு பங்­கா­ளிக் கட்­சி­கள் இருக்­கின்­றன. இந்­தக் கட்­சி­க­ளி­னது விருப்­பங்­க­ளும் ஆரா­யப்­ப­டும். எல்­லோ­ரு­டைய விருப்­பங்­க­ளின் அடிப்­ப­டை­யில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வேட்­பா­ளர்­தான் நிறுத்­தப்­ப­டு­வார் என்­ப­தில் எந்­த­வித மாற்­ற­மும் இல்லை. முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டு­கின்­ற­வர் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரா­கத்­தான் இருப்­பார் – என்­றார்.

வட­மா­காண முன்­னாள் அமைச்­சர் டெனீஸ்­வ­ரன் அவ­ரது அமைச்­சுப் பொறுப்­பில் தொடர்­வ­தற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் இடைக்­கால உத்­த­ரவு வழங்­கி­யி­ருப்­பது குறித்­துக் கருத்­துத் தெரி­வித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிறீ­த­ரன், ‘‘டெனீஸ்­வ­ர­னைப் பொறுத்­த­வ­ரை­யில் வெற்­றி­யாக இருக்­க­லாம். ஆனால் மாகாண சபை­யின் நடை­மு­றை­கள் தொடர்­பிலே அது ஒரு தோல்­வியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது’’ என்­றார்.

இடை­வெ­ளி­கள் இன்­னும் அதி­க­ரிப்­ப­தற்கு கார­ண­மாக இந்த விட­யம் அமை­கி­றது என்­றும் சுட்­டிக்­காட்­டி­னார். தமி­ழர்­க­ளின் உண்­மை­யான போராட்­டங்­க­ளில் இருந்து மக்­க­ளின் கவ­னத்­தைத் திசை திருப்­பு­வ­தாக இவை அமைந்­தி­ருக்­கின்­றன என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

Leave a comment