கர்நாடகாவில் அமைதி திரும்புகிறது

369 0

201609141237533683_karnataka-quiet-returns-military-reserve-security-extension_secvpfஇந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தற்போது அமைதி திரும்புவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டதையடுத்து கர்நாடகாவில் கடந்த 8 நாட்களாக வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.

நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் தமிழகத்திற்கு 20ஆம் திகதி வரை தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனையடுத்து வன்முறைகள் அதிகரித்தன.

தமிழக வாகனங்கள் தீக்கிறையாக்கப்பட்டன.

இதையடுத்து மத்திய அரசு பெங்களுரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்புக்காக ராணுவத்தை நிலைநிறுத்தியது.

ரோந்து நடவடிக்கைகளிலும் காவற்துறையினர் ஈடுப்பட்டனர் இனையடுத்து கர்னாடகா மாநிலத்தில் தற்போ அமைதி நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.