பணப்பெற்றதாக கூறப்படும் கருத்து போலியானது-ரஞ்சித் சொய்சா

256 0

முன்னாள் ஜனாதிபதி சைனா ஹாபர் நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் வங்கி கணக்கில் இருந்து பணம் பெற்றதாக வெளியிடப்படும் அறிக்கை அரசாங்கத்தினால் போலியாக கோர்க்கப்பட்டவை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு ஒன்றும் புதியது இல்லை எனவும் 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் இது போன்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும் மூன்றரை வருடங்கள் ஆகியும் இதுவரையில் அது தொடர்பில் எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் கண்டு பிடிக்க முடியாமல் போன ஒன்றை ஊடகவியலாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment