டிரம்ப்பின் குடியேற்ற கொள்கைக்கு வலுக்கும் எதிர்ப்பு – வெள்ளை மாளிகையை நோக்கி பிரமாண்ட பேரணி

201 0

அமெரிக்காவிற்குள் அகதிகளாக வரும் பெற்றோர்களிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை பிரிக்கும் டிரம்பின் கொள்கையை எதிர்த்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். 

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி அமெரிக்காவில் நுழையும் அகதிகளையும் அவர்களின் குழந்தைகளையும் பிரித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். டிரம்பின் உத்தரவின் அடிப்படையில், பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டனர்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனது கொள்கையில் பின்வாங்கிய அதிபர் ட்ரம்ப், பிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்களிடம் ஒப்படைக்க அனுமதித்தார்.
இந்நிலையில், டிரம்பின் குடியேற்ற கொள்கையை எதிர்த்து நேற்று அமெரிக்கா அதிபரின் வெள்ளை மாளிகையை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். அவர்கள் டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியவாறு அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர். மேலும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இதே காரணத்திற்காக இந்திய வம்சாவளி எம்.பி. பிரமிளா ஜெயபால் செனட் சபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment