சரத் ஆப்றுவை குற்றமற்றவர் – காலஞ்சென்ற பின் தீர்ப்பு

324 0

sarath-415x260பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் காலஞ்சென்ற சரத் ஆப்றுவை குற்றமற்றவர் என கருதுவதாக கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பந்துல கருணாரத்ன இன்று அறிவித்துள்ளார்.

பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரினால் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் நீதியரசரின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி தமது கட்சிக்காரர் குற்றமிழைத்தவர் என்று நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

இதன் காரணமாக தமது கட்சிக்காரரை குற்றமற்றவர் என்று பெயரிடுமாறு சரத் அப்றுவின் சட்டத்தரணி கோரினார்.

இது தொடர்பான விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அப்றுவை குற்றமற்றவர் என பெயரிட்டு வழக்கை நிறைவு செய்வதாக அறிவித்தார்.