தனுஷ்கோடி மணல்திடலில் இலங்கை அகதி மீட்பு (காணொளி)

485 0

இந்தியா,  இராமேஸ்வரம் தனுஷ்கோடி மணல்திடலில் தவித்துவந்த இலங்கை அகதியை கைது செய்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தனுஷ்கோடி  அருகே மூன்றாம் மணல்திட்டில் சந்தேகத்திற்க்கு இடமாக ஒருவர் பல மணி நேரமாக நிற்பதாக கடலோர காவல்படையினருக்கு மீனவர்கள் தகவல் வழங்கியதனையடுத்து அங்கு சென்ற தனுஷ்கோடி கடலோர காவல் படையினர் இலங்;கையை சேர்ந்த அகதியை கைது செய்து மண்டபம் முகாமிற்கு கொண்டுசென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

பொலிஸாரின்  விசாரணையில் குறித்த நபர் தான் இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை நாலாம் வாட்டாரம் பகுதியைச் 42 வயதுடைய சேர்ந்த அருள்ஜெயரத்தினம் எனவும்;, பாதுகாவலர் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கைது  செய்யப்பட்ட அகதியிடம் ரூபா ஒரு லட்சம் ரூபாவிற்கான டொலர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மண்டபம் அகதி முகாமில் இவரின் சகோதரி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.