பாதாள உலக குழுத்தலைவரிற்கு சிறையில் பலத்த வரவேற்பு

324 0

மாத்தறையில் பொலிஸ்உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட பாதாளஉலக குழுவை சேர்ந்த கொஸ்கொட தாரகவிற்கு சிறையில் பெரும்வரவேற்பு அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறையில் உள்ள அவரது சகாக்கள் பெரும்வரவேற்பளித்தனர் விருந்தும் இடம்பெற்றது என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறையில் அவரை தோளில்சுமந்து சென்றனர், துபாயில்  தற்போது தலைமறைவாக உள்ள மாகந்துரே மதுஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறையில் தாரகவிற்கு அனைத்து வசதிகளையும் வழங்குமாறு  மதுஸ் உத்தரவை பிறப்பித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல கொள்ளை மற்றும் கொலைகள் தொடர்பில் தேடப்பட்டுவந்தகொஸ்கொட தாரக வெள்ளிக்கிழமை மாத்தறையில் இடம்பெற்ற கொள்ளைசம்பவத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment