யாழ்ப்பாணத்தை உலுக்கிய ஆறு வயது சிறுமியின் படுகொலைக்கு நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…!!

5303 0

யாழ். சுழிபுரத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டம் காட்டுப்புலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை ஊடாக சுழிபுரம் சந்தியை அடைந்து அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தொடர்ந்து சுழிபுரம் விக்ரோறியா கல்லூரிக்குச் சென்று அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சிவனேஸ்வரன் றெஜினா என்ற சிறுமி நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.இந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைத செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும், சடலத்துக்கான பிரேத பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படுவதாகவும், அதன் பின்னரே இது குறித்த விபரங்களை வழங்க முடியும் என்றும் வட்டுக் கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் நேற்று நடைபெற்ற இந்த துயர சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. மதியம் 3 மணியாகியும் சிறுமி வீட்டுக்கு வராத நிலையில் அனைவரும் சேர்ந்து சிறுமியை தேடிய போது 200 மீற்றர் தூரத்தில் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் காணப்பட்ட கிணற்றில் சிறுமியின் சடலம் கிடந்துள்ளது.சிறுமி சீருடைகள் அற்ற நிலையில் அரை நிர்வாணமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், சிறுமியின் கழுத்தில் கயிற்றால் நெருக்கிய தடயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment