விமல் வீரவங்சவின் கட்சியுடன் 16 பேர் கொண்ட குழு இன்று சந்திப்பு

349 0

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (26) தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

கூட்டு எதிர்க் கட்சியுடன் இணைந்து செயற்படுவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக 16 பேர் கொண்ட குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எம்.பி. தெரிவித்துள்ளார்.

Leave a comment