சிறுத்தையை கொலை செய்த 4 பேருக்கு 29 வரை விளக்கமறியல்

237 0

கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் சிறுத்தையொன்றை அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை சிற்றூழியர் உட்பட நான்கு பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  இன்று (25) கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான் எஸ். கிரேஷியன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வனப் பாதுகாப்பு அதிகாரிகளினால் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வீடியோ காட்சியை ஆதாரமாக வைத்து சந்தேகநபர்களை அடையாளம் கண்டதன் பின்னர், இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment