சிரியாவில் பிணைக்கைதிகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்

287 0

201609141001182213_isis-murder-prisoners-like-animals-in-slaughterhouse_secvpfசிரியாவில் பிணைக்கைதிகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த வீடியோ காட்சிகளை ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.  பிணைக்கைதிகளின் தலையைதுண்டித்து கொலை செய்யும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது வேறுவிதமாக கொலை செய்யும் ஒரு கொடூரமான வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், ஆரஞ்சுநிற உடை அணிவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் கைகள் பின்புறம் கட்டப்பட்டுள்ளது.அவர்களை முழங்காலிட்ட நிலையில் உட்கார வைத்து பின்புறம் நிற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆடு, மாடு மற்றும் மிருகங்களை அறுப்பது போன்று பிணைக் கைதிகளின் கழுத்தை ஈவு இரக்கமின்றி அறுக்கின்றனர். ரத்தம் பீறிட்ட நிலையில் அவர்கள் மடிந்து சாய்கின்றனர்.

அத்துடன் நிற்காமல் அவர்களின் உடலை இறைச்சிக்கடையில் ஆடு, மாடுகளை தொங்க விடுவது போன்று கொலை செய்யப்பட்டவர்களையும் தொங்கவிடுகின்றனர். இக்காட்சிகள் 12 நிமிடங்கள் ஓடுகிறது. இக்கொலைக்கள் வடகிழக்கு சிரியாவில் டெரஸ்-ஷார்நகரில் ஆடு,மாடுகளை வெட்டும் கொலை களத்தில் வைத்து நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் அமெரிக்காவுக்கு உளவு பார்த்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.