தேரரின் ஹிட்லர் கருத்தில் உள்ள மாயை இதுதான்- காவிந்த

231 0

கோட்டாப ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவரப் போவதாக பொய்யான ஒரு மாயையை நாட்டில் ஏற்படுத்தி விட்டு, வேறு ஒருவரை வேட்பாளராக நியமிப்பதற்கே கூட்டு எதிர்க் கட்சியும் அதன் பின்னால் உள்ள கடும்போக்காளர்களும் நாடகமாடுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற மத அனுஷ்டான நிகழ்வில் உரையாற்றும் போது அஸ்கிரி பீட துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் தெரிவித்திருந்த ஹிட்லர் ஆட்சி குறித்து,   ஊடகவியலாளர் ஒருவர் இவரிடம் வினவிய போதே இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment