தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் அரச தலைவர்களை சந்திக்க முயற்சி!

211 0

தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள்,   ஜனாதிபதி மற்றும்   பிரதமரை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

பெருந்தோட்ட மக்களுக்கான காணி வழங்கல் உள்ளிட்ட விடயங்களில் நிலவுகின்ற இழுப்பறி நிலைமைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த சந்திப்பு முயற்சி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், பெருந்தோட்ட காணி மற்றும் வீடமைப்பு பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால், அரசாங்கத்திலிருந்து வெளியேறவிருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment