திருகோணமலை மாவட்டத்திற்கு சுற்றுலா வந்திருந்தவர்களில், 11 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம், சிலாபம் பகுதியிலிருந்து வருகை தந்த குறித்த சுற்றுலாப் பயணிகள், தாங்களே மீன், பருப்பு மற்றும் அச்சாறு போன்ற உணவு வகைகளை சமைத்து உட்கொண்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.