மருந்துகளின் விலை குறைப்பு-ராஜித

238 0

அதிக விலை கொண்ட ஏராளமான மருந்துகளின் விலைகளை எதிர்வரும் ஜூலை மாதத்தில் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 48 அத்தியவசிய மருந்துகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் இரண்டாவது கட்டமாக விலை கூடிய மருந்துகளின் விலைகளை குறைக்க தாம் தீர்மானித்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்களை சீர்திருத்துவதற்கும் அமைச்சர் தீர்மனித்துள்ளார்.

சுகாதார சேவையிலிருந்து வட் வரியை நீக்கியதன் காரணமாக ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் அதன் காரணமாக வைத்தியசாலைகளின் கட்டணங்களை கட்டுப்படுத்த தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment