மகாவலி ஆற்றில் சவுதியர்கள் பயணித்த படகு விபத்து, ஒருவரை காணவில்லை

256 0

சவுதி அரேபியாவைச் சேர்ந்த 7 பேர் மகாவலி ஆற்றில் படகு சவரி செய்தபோது, படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த படகில் பயணித்த ஆறு பேர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மகாவலி ஆற்றின் கட்டுகஸ்தொட்ட, குஹாகொட பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போனவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment