தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்றும் (20) தொடர்வதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
பல்வேறு கேரிக்கைகளை முன் வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்து தபால் தொழிற்சங்கம், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாகவும் கூறியுள்ளது.
அம்முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தபால் சேவை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் (19) அனைத்து ஊழியர்களும் சேவைக்கு திரும்புமாறும், அவ்வாறு திரும்பாதோர், பணியிலிருந்து விலகியதாக கருதப்படுவர் எனவும் தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன அறிவித்தல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.