நாட்டை துண்டாட மைத்ரி – ரணில் அரசு சதி – மஹிந்த

347 0

mahintha1புதிய அரசியல் யாப்பின் மூலம் நாட்டை துண்டாட மைத்ரி – ரணில் அரசாங்கம் சதித் திட்டம் தீட்டி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த குற்றச்சாhட்டை முன்வைத்துள்ளார்.

29 ஆயிரம் படையினர் தமது உயிர்களை தியாகம் செய்து மீட்ட நாட்டை துண்டாட இடமளிக்க முடியாது என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மஹிந்த அரசாங்கத்தின் மீது இந்த பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட மக்கள் அணி திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆத்துடன், இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையால் நாடு பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் மஹிந்த குறிப்பிட்டார்.