போதைப்பொருள் விற்பனையாளர் கிஹான் சந்தருவன் கைது

201 0

 பிரதான போதைப்பொருள் விற்பனையாளரான ஜயரத்னகே கிஹான் சந்தருவன், பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் இவர் இன்று (19) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் இவரிடம் இருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர் கொலை செய்யப்பட்ட முன்னாள் நகர சபை உறுப்பினர் ஷாமெல் சந்தருவனுடைய தம்பி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment